தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நிகழ்நிலை விண்ணப்பத்தினை கல்வி அமைச்சு கோரியுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக மாணவர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தற்போது இந்த அறிவிப்பானது மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை வழங்கியுள்ளது. பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த பல மாணவர்களும், அதேபோல் கல்வியியல் கல்லூரிகளில் இணைந்து ஆசிரியராக சேவை புரிய வேண்டும் என்ற பெரும் கனவில் உள்ள மாணவர்களும் தற்போது மிகுந்த உற்சாகத்துடன் விண்ணப்பிக்க தொடஙகியுள்ளனர்.
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி - 2024.03.22
இவ் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் மாணவர்கள் மிகுந்த அவதானத்தோடு விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவும்.
தெரிவுசெய்யும் பாடங்களை சரியாகத் தெரிவுசெய்ய வேண்டியது மிக முக்கியமாகும்.
இணைய விண்ணப்பத்திற்குச் செல்ல
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
0 Comments